மீனவர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக நீர்கொழும்பு – கொழும்பு வீதியூடான போக்குவரத்திற்கு இடையூறு…!!
சட்டவிரோத முறைகளில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்து நீர்கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு நகரசபைக்கு முன்னால் தெல்வத்த சந்தியில் முன்னெடுக்கப்படும் மீனவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக நீர் கொழும்பு – கொழும்பு பிரதான வீதியின் போக்கவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
நீர் கொழும்பு – கொழும்பு பிரதான வீதியின் ஒரு வழிப் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
திருகோணமலை, மன்னார், நீர்கொழும்பு,சிலாபம், கற்பிட்டிய,புத்தளம் மற்றும் வென்னப்புவ உட்பட பல பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இந்த ஆர்ப்பாட்டதில் கலந்து கொண்டுள்ளனர்.
சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதால் மீன்வளம் சூறையாடப்படுவதுடன், தங்களின் தொழிலும் நெருக்கடிக்குள்ளாகுவதாக மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதிகளில் மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை.
Average Rating