பாபநாசம் தலையணையில் மூழ்கி தொழிலாளி பலி…!!

Read Time:1 Minute, 21 Second

d227a34c-a5e3-44c3-bec5-6d92ba150323_S_secvpfஅம்பை ஆர்.எஸ். காலனியை சேர்ந்தவர் கலிகாச்சலம் (வயது 45). நெல்லையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் தனது நண்பர்களுடன் நேற்று மாலை பாபநாசம் தலையணைக்கு குளிப்பதற்காக சென்றார். அங்கு நண்பர்களுடன் அவர் நீண்ட நேரம் குளித்தார். நண்பர்கள் அனைவரும் குளித்து விட்டு அணையில் இருந்து வெளியில் வந்த பின்னும் ‘இன்னும் சிறிது நேரம் குளித்து விட்டு வருகிறேன்’ என கூறி கலிகாச்சலம் மட்டும் தனியாக அணையில் குளித்துள்ளார்.

அப்போது அவர் திடீரென நீரில் மூழ்கினார். இதில் அவர் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தார். இதுகுறித்து வி.கே.புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் கலிகாச்சலம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காபூலில் தலிபான் தற்கொலைப்படை தாக்குதல்: 9 பேர் பலி…!!
Next post தனது பெயர் எழுதப்பட்ட பிளாஸ்டிக் பையை அணிந்திருந்த 5 வயது ஆப்கான் சிறுவனை சந்திக்க விரும்பும் மெஸ்சி…!!