எம்பிலிப்பிட்டிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இன்றுடன் ஆறு நாட்கள் நிறைவு…!!
Read Time:1 Minute, 3 Second
எம்பிலிப்பிட்டிய கொலை தொடர்பாக சந்தேகநபர்களை கைது செய்யுமாறு எம்பிலிப்பிட்டிய நீதவான் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு காவற்துறை மா அதிபருக்கு கட்டளை ஆணையை பிறப்பிக்குமாறு கோரி மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது
குறித்த மனுவை மேற்படி சம்பவத்தில் உயிரிழந்த சுமித் பிரசன்னவின் மனைவி நிஷாமனி முனசிங்கவிற்காக முன்னிலையான சட்டத்தரணி தாக்கல் செய்தார்
குறித்த காவற்துறை அதிகாரிகளை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டு இன்றுடன் ஆறு நாட்கள் நிறைவடைந்துள்ளது.
இதுவரை அவர்கள் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating