சிறுவனின் தலை பேணிக்குள் சிக்கியது – சவூதி சிவில் பாதுகாப்புப் படையினர் காப்பாற்றினர்..!!
Read Time:1 Minute, 8 Second
சவூதி அரேபியாவிலுள்ள சிறுவன் ஒருவனின் தலை பால் பேணி ஒன்றுக்குள் சிக்கிக் கொண்டதால் அந்நாட்டு சிவில் பாதுகாப்புப் படையினர் உதவிக்கு அழைக்கப்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
சவூதி அரேபியாவின் தென் மேற்கு நகரான அபு அரிஷிலுள்ள தனது வீட்டில் பாரிய பால் பேணியொன்றுடன் அச்சிறுவன் விளையாடிக் கொண்டிரு ந்தான்.
அப்பேணிக்குள் அச்சிறுவன் தனது தலையை நுழைத்த பின்னர் தலையை வெளியே எடுக்க முடியவில்லை.
அதையடுத்து, சவூதி சிவில் பாதுகாப்புப் படையினருக்கு அச்சிறுவனின் பெற்றோர் தகவல் தெரிவித்தனர்.
பின்னர் சிவில் பாதுகாப்புப் படையினர் அவ்வீட்டுக்கு வந்து பேணியை வெட்டி சிறுவனை விடுவித்துள்ளனர்.
Average Rating