மதுரை அருகே மனைவியின் கள்ள காதலன் மீது தாக்குதல்; கணவர் கைது

Read Time:1 Minute, 48 Second

மதுரை அருகே செக்கானூரணி போலீஸ் சரகத்துக்குட்பட்ட கலுங்கு பட்டியை சேர்ந்தவர் தெய்வம், அவரது மனைவி கவுசல்யா (வயது 30). அதே பகுதியை சேர்ந்தவர் கனிராஜா (33). இவர்கள் வீடு அருகருகே இருப்பதால் கவுசல்யா, கனிராஜா ஆகியோர் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. கண்களால் பேசிய அவர்கள் நாளடைவில் காதல் வயப்பட்டனர். ஊருக்கு தெரியாமல் அடிக்கடி சந்தித்து வந்தனர். இந்த விவகாரம் தெய்வத்துக்கு தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் தனது மனைவியை கண்டித்தார். அதோடு கனிராஜாவையும் எச்சரித்தார். என்றாலும் கள்ளக்காதலர்கள் 2 பேரும் மறைமுகமாக சந்தித்தனர். இதனை கேள்விப் பட்டதும் தெய்வம் மேலும் கோபம் கொண்டார். அவரை பழிவாங்க தக்க சமயம் பார்த்து கொண்டு இருந்தார். கனிராஜா கண்மாய்க்கரை பக்கம் நடந்து வந்தார். இதனை அறிந்த தெய்வம் தனது உறவினர் 4 பேருடன் சென்றார். பின்னர் அவர்கள் கனிராஜாவை வழிமறித்து சரமாரியாக தாக்கி விட்டு தலைமறைவானார்கள். படுகாயம் அடைந்த அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து செக்கா னூரணி போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து தெய்வத்தை கைது செய்தனர். தலைமறைவான மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…
Next post மலேசியத் தமிழர்கள் மீதான அடக்குமுறை – அமெரிக்கா கவலை