நடுவானில் தீப்பற்றி எரிந்த விமானம்: ஒருவர் காயத்துடன் உயிர் தப்பிய விமானிகள்…!!

Read Time:1 Minute, 26 Second

06c2388d-5fe5-4c5f-83fe-6b17e8ca640e_S_secvpfசோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷூவில் இருந்து டிஜிபோட்டி நாட்டிற்கு டால்லோ விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் 74 பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்தது.

விமானம் புறப்பட்டு 20 நிமிடத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தின் வலது பக்கம் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது போன்ற சத்தம் கேட்டுள்ளது. அத்துடன் தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.

இதனால் விமானி உடனடியாக மொகடிஷூக்கு விமானத்தை திருப்பி அவசரமாக தரையிறக்கினார். விமானம் தரையிறங்கியதும் விமானப் பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதில் அதிக உயிர்ப்பலி தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் இருவர் காயம் அடைந்துள்ளனர் என்றும், அதில் ஒருவர் கவலைக்கிடமான வகையில் உள்ளார் என்று அந்த விமான நிறுவனத்தின் பிரதிநிதி அப்டினாசீர் நுர் கூறியுள்ளார்.

மேலும், விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் ரூ.352,000 மாதாந்த வருமானம்: சுவிஸில் வாக்கெடுப்பிற்குத் திட்டம்..!!
Next post சட்டவிரோத அணு ஆயுத சோதனைகளை கண்டுபிடிக்க புதிய மென்பொருள்…!!