ராமேஸ்வரம் ரெயில் நிலையம் அருகே மரத்தில் தூக்கிட்டு சென்னை பெண் தற்கொலை…!!
Read Time:1 Minute, 8 Second
ராமேஸ்வரம் ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு மரத்தில் இன்று காலை நடுத்தர வயது பெண் பிணமாக தூக்கில் தொங்குவதை கண்ட சிலர் இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்துவந்த போலீசார் அந்த பிணத்தை தூக்கில் இருந்து இறக்கி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில் அந்தப் பெண் சென்னையில் இருந்து வந்த ரெயிலில் இன்று அதிகாலை ராமேஸ்வரத்துக்கு வந்து சேர்ந்துள்ளார் என்பது அவர் வைத்திருந்த ரெயில் டிக்கெட்டை வைத்து தெரியவந்துள்ளது.
அவர் யார்? எந்த மாநிலம், மாவட்டத்தை சேர்ந்தவர்?, இந்த விபரீத முடிவை அவர் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன? என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Average Rating