தனியார் காணி ஒன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு..!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு-திருமலை பிரதான வீதியில் ஊறணி பகுதியில் தனியார் காணி ஒன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மலசலகூட அறையொன்றில் உருக்குலைந்த நிலையில் அடையாளம் காணப்படாத சடலம் ஒன்றே இன்று புதன்கிழமை மதியம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி சடலத்தை பார்வையிட அதிகளவான பொது மக்கள் குறித்த இடத்திற்கு வருகை தந்த வன்னமுள்ளனர்.
குறித்த சடலம் தொடர்பான விசாரணைகளை ஸ்தலத்திற்கு விரைந்த மட்டக்களப்பு தலைமைய பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த நபர் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது
Average Rating