தண்டையார்பேட்டையில் கள்ளக்காதலி–தாயாரை அரிவாளால் வெட்டிய ரவுடி…!!

Read Time:2 Minute, 36 Second

57aec2e8-f23c-40f2-be56-2ba5d68fa5b9_S_secvpfதண்டையார்பேட்டை நாவலர் குடியிருப்பை சேர்ந்தவர் லட்சுமி (48). இவரது மகள் தேவி. இவருக்கும் கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தேவி கணவரை பிரிந்து தாய் வீட்டிலேயே வசித்து வந்தார்.

இந்த நிலையில் பழைய வண்ணாரப்பேட்டை மாடர்ன்லைனை சேர்ந்த கார்த்திக் என்பவருடன் தேவிக்கு பழக்கம் ஏற்பட்டது. ரவுடியான கார்த்திக் மீது கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில் கார்த்திக்குடன் தேவி ஓட்டம் பிடித்தார். இருவரும் தனிக்குடித்தனம் நடத்தினார்கள். இந்த நிலையில் ஒரு வழக்கு தொடர்பாக கார்த்திக்கை போலீசார் பிடித்து சென்று ஜெயிலில் அடைத்தனர்.

இதையடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு லட்சுமி தனது மகள் தேவியை அழைத்து வந்து தனது வீட்டிலேயே வைத்திருந்தார்.

இந்த நிலையில் ஜெயிலில் இருந்து கார்த்திக் வெளியே வந்தார். அவர் லட்சுமி வீட்டுக்கு சென்று குடும்பம் நடத்த வருமாறு தேவியை அழைத்தார். ஆனால் லட்சுமி விடமறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் அரிவாளால் லட்சுமியை வெட்டினார். அவரது தலை, கழுத்து பகுதிகளில் வெட்டு விழுந்தது. இதைப் பார்த்த தேவி தடுக்க வந்தார். இதில் அவருக்கும் வெட்டு விழுந்தது. பின்னர் கார்த்திக் தப்பி ஓடிவிட்டார்.

படுகாயம் அடைந்த லட்சுமி, தேவி ஆகியோரை அக்கம் பக்கத்தினர் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு லட்சுமிக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். லட்சுமி மீது கஞ்சா கடத்தல் மற்றும் விபசார வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஏமனில் உச்சகட்டத்தை நெருங்கும் உள்நாட்டுப் போர்: 30 பேர் பலி…!!
Next post நம்ம மூளை வேலை செய்யாமல் இருக்க காரணங்கள்…!!