இந்தோனேசியாவில் பூகம்பம்…!!
Read Time:1 Minute, 5 Second
இந்தோனேசியாவில் கிழக்கு பகுதியில் உள்ள திமோர் தீவில் இன்று அதிகாலை 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வழக்கத்துக்கு அதிகமான உயரத்தில் கடல் அலைகள் எழும்பின. இருந்தும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடவில்லை.
அதிகாலை 4.30 மணி அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறி பாதைகளில் ஓட்டம் பிடித்துள்ளனர்.
நிலநடுக்கம் காரணமாக வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்துள்ளன.
பொதுவாக இந்தோனேசியா பசிபிக் கடல் பிராந்தியத்தில் பூகம்ப ஆபத்து பகுதியில் உள்ளது. இதனால் இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.
Average Rating