செயிட் ராட் அல் ஹூசைன் நாளை இலங்கை வருகிறார்…!!
Read Time:1 Minute, 37 Second
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹூசைன் நாளைய தினம் இலங்கை வருகிறார்.
நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் அவர், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரச தலைவர்களை சந்திக்க உள்ளார்.
அத்துடன், எதிர்வரும் 7ஆம் மற்றும் 8ஆம் திகதிகளில் அவர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, இலங்கை வரும் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹூசைனிடம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுல்ப்படுத்துமாறு கோரவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது
கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா இதனை தெரிவித்தார்.
Average Rating