முன்னாள் எம்.பி வீட்டில் திருடியதாக 4பேர் கைது!- காட்டிக்கொடுத்தது மோப்பநாய்..!!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் திருட்டு இடம்பெற்ற நிலையில், மோப்ப நாய் முகர்ந்து சென்று அடையாளம் காட்டியதற்கிணங்க 4பேரைக் கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்.கோயில் வீதியில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் உறுப்பினர் சூ.சிறில் வீட்டில் நேற்று முன்தினம் இந்தத் திருட்டு இடம்பெற்றிருந்தது.
இதன்போது 20பவுண் நகைகள் மற்றும் 15 ஆயிரம் ரூபா பணம் என்பன திருடப்பட்டிருந்தன.
இது தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று மோப்பநாய் சகிதம் அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது மோப்பநாய் திருட்டு இடம்பெற்ற வீட்டிலிருந்து கோயில் வீதி, பிரதான வீதி, கண்டி வீதி வழியே சென்று கண்டி வீதியிலுள்ள ஒருவரது வீட்டுக்குச் சென்றுள்ளது.அங்கு மேசன் வேலை செய்து கொண்டிருந்த 3 பேரையும் நாய் அடையாளம் காட்டியுள்ளது.என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்கள் கைது செய்யப்பட்டதோடு அந்த வீட்டுக்கு அருகே இருந்த ஒருவரையும் அதனுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Average Rating