மது போதையில் வகுப்பறையிலேயே ஆபாச படம் பார்த்த 11-ம் வகுப்பு மாணவர்கள்…!!

Read Time:1 Minute, 30 Second

cbvbvதிண்டுக்கல்: திண்டுக்கல்லில் 11-ம் வகுப்பு மாணவர்கள் சிலர் மது போதையில் வகுப்பறையிலேயே ஆபாச படம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி உயர்நிலை பள்ளி மலைக்கோட்டை அடிவாரத்தில் இயங்கி வருகிறது. இங்கு 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 7 பேர் ஒன்றாக சேர்ந்து உணவு இடைவேளையின் போது வகுப்பறையில் செல்போனில் ஆபாச படம் பார்த்துள்ளனர்.

வகுப்பறை மூடப்பட்டிருப்பதை கண்ட ஆசிரியர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த மாணவர்கள் 7 பேரும் செல்போனில் ஆபாச படம் பார்த்தது தெரிய வந்தது. அவர்களிடம் தலைமை ஆசிரியர் நடத்திய விசாரணையில் 4 பேர் மது அருந்தி விட்டு ஆபாச படம் பார்த்ததை ஒப்புக் கொண்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம் சம்பந்தபட்ட மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தது. மேலும் ஒழுங்கினமாக நடந்து கொண்ட மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாடசாலையில் அடிப்படை வசதிகள் ​கோரி ஆர்ப்பாட்டம்…!!
Next post வான் தாக்குதல்களால் சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு குந்தகம்…!!