பெங்களூருக்கு சுற்றுலா வந்த பெண்ணை கடத்தி 4 நாட்கள் கற்பழிப்பு: 5 பேர் கும்பல் கைது

Read Time:2 Minute, 39 Second

டெல்லியை சேர்ந்தவர் இளம்பெண் ரூபினா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் பெங்களூருக்கு சுற்றுலா வந்தார். தனியார் விமானத்தில் பெங்களூர் விமான நிலையம் வந்து இறங்கினார். அந்த விமானம் குறிப்பிட்ட நேரத்தை கடந்து தாமதமாக இரவு 11.50 மணிக்கு வந்து சேர்ந்தது. அவர் எற்கனவே ஓட்டலில் தங்க பதிவு செய்திருந்தார். விமானநிலையத்தில் இருந்து டாக்சி பிடித்து அந்த ஓட்ட லுக்கு சென்றார். ஆனால் இவர் தாமதமாக வந்ததால் அவருக்கு ஓதுக்கி இருந்த அறையை வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டனர். வேறு அறை இல்லை என்று கூறிவிட் டனர். எனவே அதே டாக்சியில் ஏறி வேறு ஓட்டலுக்கு செல்லும்படி கூறினார். அப்போது டாக்சி டிரைவர் இந்த நேரத்தில் ஓட்டலில் அறை கிடைப்பது கஷ்டம். எனக்கு தெரிந்த வாடகை அபார்ட்மேண்ட் ஒன்று உள்ளது. அங்கு தங்கி கொள்ளுங்கள் என்று கூறினார். இதை நம்பி ரூபினா அவனுடன் சென்றார். அந்த வீட்டுக்கு அழைத்து சென்று ஒரு அறையில் டாக்சி டிரைவர் தங்க வைத்தார். அதிகாலை நேரத்தில் டாக்சி டிரைவர் ரூபினா மீது பாய்ந்து வலுக்கட்டாயமாக கற்பழித்தார். பின்னர்அறைக் குள் அடைத்து வைத்து விட்டு வெளியே சென்ற அவர் தனது நண்பர்களையும் அழைத்து வந்து ரூபினாவையை விருந் தாக்கினார். 4 நாட்களாக அந்தஅறையிலேயே அடைத்து வைத்து அவர்கள் மாறி, மாறிகற்பழித்தனர். தினமும் 5-க்கும் மேற்பட்டவர்கள் வந்து ரூபினாவை சூறையாடினார்கள். அந்த காட்சிகளை படமும் பிடித்தனர். 4-வது நாள் அதில் ஒருவர் கதவை திறந்து ரூபினாவை தப்பிக்க விட்டார். அவர் பெங்களூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சென்று புகார் கொடுத்தார். இது தொடர்பாக 5 பேரை போலீசார்கைது செய்தனர். ஆனால் டாக்சி டிரைவர் இன்னும் சிக்கவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post குடும்ப தகராறு காரணமாக மனைவியை சுத்தியால் அடித்து கொன்று விட்டு வாலிபர் தற்கொலை வீட்டு அருகிலேயே ரெயில் முன் பாய்ந்தார்
Next post இன்டர்நெட் மூலம் அடுத்தவர் செக்ஸ் காட்சிகளை நேரில் பார்க்கிறார்கள்: இந்தியாவில் பரவும் புது மோகம்