அல் ஹூசைன் வடகிழக்கு முதலமைச்சர்களை சந்திக்கவுள்ளார்…!!
Read Time:1 Minute, 31 Second
நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹூசைன் இன்று வெளிவிவகார அமைச்சர் மங்கல சமரவீரவை சந்தித்துள்ளார்
கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.
இதனிடையே, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நாளைய தினம் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதன்போது, அவர் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர்கள், ஆளுநர்கள் உள்ளிட்ட ராஜதந்திர பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.
இதுதவிர, அவர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்து இரு தரப்பு விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.
Average Rating