திருகோணமலையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது…!!
Read Time:57 Second
திருகோணமலை – அக்போபுர – கித்துல் பகுதியில் இரண்டு கிலோ கஞ்சாவை தம் வசம் வைத்திருந்த நபர் ஒருவர் சனிக்கிழமை (6) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கித்துல் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரையே இவ்வாறு கைது செய்யதுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேகநபர் கஞ்சா விற்பனை செய்வதாக அவசர பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Average Rating