களுவன்கேணியில் காணாமல் போன மாணவன் கொழும்பில் மீட்பு..!!

Read Time:2 Minute, 15 Second

missing (8)மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவன்கேணிக் கிராமத்தில் காணாமல் போன சிறுவன் ஒருவன் கொழும்பில் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவன்கேணிக் கிராமத்தில் காணாமல்போன குறித்த பாடசாலை மாணவன் கொழும்பிலுள்ள விடுதி ஒன்றிலிருந்து மீட்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளான்.

களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த களுவன்கேணி சிங்காரத் தோப்பு வீதியைச் சேர்ந்த சந்திரகுமார் சதீஸ்குமார் என்ற மாணவனே கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் காணாமல் போயிருந்ததாகப் பெற்றோர் தெரிவித்தனர்.

பின்னர் குறித்த சிறுவனே வெறொரு தொலைபேசி இலக்கத்திலிருந்து அவனது பெரியப்பாவுடன் தொடர்பு கொண்டு தான் கொழும்பில் உள்ள ஒரு விடுதியில் வேலைக்குச் சேர்ந்திருப்பதாகவும் தனது வயதை உறுதிப்படுத்துவதற்கு பாடசாலை அடையாள அட்டையை அனுப்பி வைக்குமாறும் கேட்டுள்ளான்.

அதன்படி, குறித்த விடுதியில் சிப்பந்தியாக வேலையில் அமர்த்தப்பட்டிருந்த மாணவனை அவனது பெற்றோர் அங்கிருந்து அழைத்து வந்துள்ளனர்.

இது குறித்து ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு சிறுவன் அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட்டதன் பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருகோணமலையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது…!!
Next post சோமாலிய விமானத்தில் குண்டு வெடிப்பு…!!