மதுரையில் விஷம் கொடுத்து குழந்தையை கொன்று தாய் தற்கொலை: ஒரு மாத குழந்தை உயிர் ஊசல்
மதுரை மீனாட்சிபுரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் விருமாண்டி. இவரது மனைவி வசந்தி (வயது28). இவர்களுக்கு சுவேதா(3) மற்றும் ஒரு மாத பெண் குழந்தை உள்ளது. கூலி வேலை செய்து குடும்பத்தை விருமாண்டி கவனித்து வந் தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குடும்பத்தில் வறுமை நிலவியதால் கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. எனவே வசந்தி தனது குழந்தை களை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். வீட்டில் 2 பெண் குழந்தைகளும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது விஷத்தை எடுத்து 2 பேருக்கும் வாயில் ஊற்றிய வசந்தி அந்த விஷத்தை தானும் குடித்து விட்டார். சிறிது நேரத்தில் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். உயிருக்கு போராடிய வசந்தியும், அவரது மகள் சுவேதாவும் சிறிது நேரத்தில் இறந்தனர். விஷம் கொடுக்கப்பட்ட ஒரு மாத குழந்தை ஆபத்தான நிலையில் இருந்தது. உடனே அந்த குழந்தை அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து செல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே வசந்தியின் கணவர் விருமாண்டி தலைமறைவாகி விட்டார். அவரையும் போலீசார் தேடி வருகிறார்கள். இந்த கொடூர சம்பவத்துக்கு வறுமை காரணமா? அல்லது வேறு காரணம் எதுவும் உண்டா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.