மன்னாரில் இளைஞர்களுக்கிடையில் மோதல் : ஒருவர் படுகாயம்…!!
மன்னார் – உயிலங்குளம் பகுதியில் இரு இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த இளைஞன், மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
உறவு முறையுள்ள இரு இளைஞர்கள் மலையக பகுதியில் இருந்து தொழில் நிமித்தம் மன்னார் உயிலங்குளம் பகுதியில் உள்ள ஆலை ஒன்றில் தங்கியிருந்து வேலைசெய்து வந்துள்ளனர். இருவரும் ஒன்றாக மது அருந்தியதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இதனையடுத்து உறவு முறை இளைஞன் மற்றையவரை கோடாரியால் தாக்கியதில் மற்றைய இளைஞனுக்கு தலையில் பலத்த காயம் எற்பட்டுள்ளது.
எனினும் குறித்த இளைஞனின் நிலை கவலைக்கிடமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் பொலிஸார் மற்றைய இளைஞனை கைது செய்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating