நண்பரின் படுக்கையறையில் பிணமாக கிடந்த கல்லூரி மாணவி…!!
Read Time:1 Minute, 17 Second
நண்பரின் படுக்கையறையில் பிணமாக கிடந்த கல்லூரி மாணவி-
டெல்லியில் நண்பரின் படுக்கையறையில் கல்லூரி மாணவி பிணமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் உள்ள பிரபல கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருபவர் அர்ஜூ சிங் என்ற மாணவி, இவரை திருமணம் செய்து கொள்வதாக ஆண் நணபர் ஒருவர் தெரிவித்தார். தனது குடும்பத்தினர் ஏற்றுகொள்ளமாட்டார்கள் என்று தனது ஆண் நண்பரிடம் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த 2-தேதி அர்ஜூ சிங் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதனை தொடர்ந்து மாணவி மாயமாகி விட்டதாக அர்ஜூ சிங் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இந்நிலையில் ஆண் நண்பரின் படுக்கையறையில் அர்ஜூ சிங் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating