பிரான்சு நாட்டில் அனல் காற்றுக்கு 22 பேர் பலி
Read Time:41 Second
பிரான்சு நாட்டில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் அடிக்கிறது. 105 டிகிரிக்கும் மேலாக வெயில் கொளுத்துகிறது. வெயில் சம்பந்தமான நோய்களும் அதிகரித்து இருக்கிறது. தொடர்ந்து அனல் காற்று வீசுகிறது. அனல் காற்றுக்கு இதுவரை 22 பேர் சுருண்டு விழுந்து செத்தனர். பலர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். கடந்த 2003-ம் ஆண்டும் இதேபோல அதிக வெப்பம் நிலவியது.