பூட்டிய வீட்டில் ரத்த வெள்ளம்: கள்ளக்காதல் ஜோடி கொலையா?- பள்ளிப்பாளையம் அருகே பரபரப்பு

Read Time:2 Minute, 36 Second

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ளது பாப்பம்பாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 30), இவர் அந்த பகுதியில் உள்ள தறி கூடத்தில் வேலைபார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த வர் நீலாம்பரி (35). இவ ருக்கு திருமணமாகி விட்டது. கணவரை பிரிந்து தனிமை யில் இருந்து வந்தார். அப் போது நீலாம்பரிக்கும் தறி தொழிலாளி சரவணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் ஒரே வீட்டில் கணவன் – மனைவி யாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சரவணன் வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் ரத்த கறைகள் படிந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் சரவணன், நீலாம்பரி யாரும் இல்லை. உடனே அவர்கள் இது குறித்து பள்ளிபாளையம் போலீசில் புகார் செய்தனர். திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சம்பத் குமார், பள்ளிபாளையம் சப்- இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு வீடு முழுவதும் ரத்தம் படிந்து காணப்பட்டது. மேலும் இதுபற்றி துப்பு துலக்க போலீஸ் மோப்ப நாய் கொண்டுவரப்பட்டது. அது ரத்தம் படிந்த இடத்தை மோப்பம் பிடித்து வெளியே ஓடிச்சென்றது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கள்ளக்காதல் ஜோடியான சரவணன், நீலாம்பரியை யாராவது கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். மேலும் வீட்டில் இருந்த மொபட்டும் காணவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மதுரையில் விஷம் கொடுத்து குழந்தையை கொன்று தாய் தற்கொலை: ஒரு மாத குழந்தை உயிர் ஊசல்
Next post திடீர் கோடீஸ்வரர்களால் துப்பாக்கி விற்பனை அமோகம்