எட்டு வயது சிறுமியை துஷ்பிரயோகப்படுத்திய 68 வயதான நபர் கைது…!!
Read Time:1 Minute, 16 Second
அம்பாறை மங்கலகம பிரதேசத்தில் 8 வயதான சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 68 வயதான நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை 4.00 மணியளவில் குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்
குறித்த சிறுமியின் பெற்றோர் வெளியில் சென்ற வேளையில் சிறுமி தனியாக வீட்டில் இருந்துள்ளார்.
அந்த நேரத்தில் குறித்த சந்தேக நபர், சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது
குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அம்பாறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
சந்தேக நபரை இன்று அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மங்கலகம காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating