தூக்கில் தொங்கிய நிலையில் 14 வயது மாணவன் சடலமாக மீட்பு…!!
Read Time:53 Second
பொகவந்தலாவ – கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்டத்தில் 14 வயது பாடசாலை மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை 08.15 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாய் சிறுவனின் சகோதரியை பாடசாலைக்கு அழைத்து சென்ற வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை, சிறுவனின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்
Average Rating