முகவரி விசாரித்து அணுகி 3பவுண் நகை கொள்ளை…!!
Read Time:1 Minute, 16 Second
முதியவரிடம் வீடொன்றின் முகவரி கேட்டு வந்தவர்கள் முதியவர் அணிந்திருந்த 3 பவுண் சங்கிலியைப் பறித்துச் சென்ற சம்பவமொன்று ஆனைப்பந்தி பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
முதியவரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வாசலில் நின்றபடி, இந்த முகவரி எங்குள்ளது எனக்கேட்டுள்ளனர். அவர்களுக்கு பதில் சொல்வதற்காக முதியவர்கள் அருகில் சென்ற வேளையிலேயே, முதியவர் அணிந்திருந்த 3 பவுண் சங்கிலியை அறுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, முதியவர் கூக்குரலிடவே அங்கு நின்ற முச்சக்கரவண்டி சாரதியொருவர் மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை குறித்து எடுத்துக்கொண்டார். இது தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Average Rating