குண்டூரில் மாணவி குளிப்பதை படம் எடுத்த மாணவர் கைது..!!
ஹைதராபாத் மாநிலம் குண்டூரில் உள்ள ஆச்சாரியா நாகர்ஜூனா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் குளிப்பதை படம் எடுத்ததாக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும், பாதிக்கப்பட்ட மாணவியும், படம் எடுத்த மாணவரும் அப்பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை என்றும் அங்கு நடைபெற்று வரும் பயிற்சி முகாமுக்கு வந்தவர்கள் என்றும் போலீஸார் கூறினார்.
ஆச்சாரியா நாகர்ஜூனா பல்கலைக்கழகத்தில் குஜராத் எரிசகச்தி ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை நிறுவனம் சார்பில் சுத்தமான எரிசக்தி என்ற தலைப்பில் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகத்திலிருந்து மாணவ, மாணவிகள் ஆச்சாரியா நாகர்ஜூனா பல்கலைக்கழகத்துக்கு வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அங்குள்ள விருந்தினர் தங்கும் விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மற்றொரு பயிற்சி முகாமுக்கு வந்த ஹைதராபாத் அனந்த்பூர் பகுதியைச் சேர்ந்த பி.ஸ்ரீகார் என்ற மாணவர், விருந்தினர் இல்லத்துக்குள் நுழைந்து அங்கு தங்கியிருந்த சட்டீஸ்கரைச் சேர்ந்த மாணவி ஒருவர் குளிப்பதை தனது கைபேசியில் படம் எடுத்தாராம்.
இதையடுத்து அந்த மாணவியும் அவரது தோழியரும் இச்சம்பவம் குறித்து பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்றனர். இதையடுத்து பல்கலைக்கழகம் சார்பில் போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் இந்திய தண்டனைச் சட்டம் 354-சி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஸ்ரீகரை கைது செய்தனர். அவரிடமிருந்து கைபேசியும் பறிமுதல் செய்யப்பட்டது.
Average Rating