ஈராக்கில் 3 கார்க்குண்டு தாக்குதலில் 26 பேர் பலி
Read Time:1 Minute, 15 Second
ஈராக்கில் நடந்த மூன்று கார்குண்டுத் தாக்குதல்களில் 26 பேர் பலியானதுடன் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். ஈராக்கின் அமரா என்ற நகரில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று வாகனத் தரிப்பிடம் ஒன்றில் வெடித்தது இதனால், ஏற்பட்ட சேதத்தை மக்கள் பார்வைக்யிட்டுக் கொண்டிருந்தபோது அவ்விடத்திலிருந்து 164 அடி தூரத்தில் இரண்டாவது கார்க்குண்டு வெடித்தது. அதனைக் தொடர்ந்து ஆறு நிமிட இடைவெளியின் பின்னர் முன்பு போலவே 164 அடி தூரத்தில் மூன்றாவது கார்க்குண்டு வெடித்தது. இம்மூன்று சம்பவங்களிலும் 26 பேர் பலியானதுடன் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். ஆனால், இத்தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை. ஆனால், இந் நகரம் ஹியா முஸ்லீம் தீவிரவாதிகளின் செல்வாக்கு மிகுந்த இடமாகும்.