நபர் ஒருவரின் ஆணுறுப்பு குறித்து கிண்டலடித்தாரென பெண்ணுக்கு எதிராக கென்யாவில் வழக்கு..!!
நபர் ஒருவரின் ஆணுறுப்பு சிறியதாக உள்ளது என கிண்டலடித்து தொலைபேசி மூலம் மெசேஜ் அனுப்பினாரென கென்யாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
கென்யாவின் மேரு நகரைச் சேர்ந்த எமிலி கரீமி எனும் பெண்ணுக்கு எதிராக இவ் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
எம்புருகு எனும் நபருக்கு எமிலி கரீமி அனுப்பிய தொலைபேசி தகவலொன்றில், எம்புருகுவின் ஆணுறுப்பு சிறியதாக இருப்பதாகவும் அதனால் அவருடன் படுக்கையை பகிர்ந்துகொள்வதற்குத் தான் விரும்பவில்லை எனவும் தெரிவித்திருந்தாராம்.
கடந்த வருடம் ஒக்டோபர் 19 ஆம் திகதி இத் தகவல் அனுப்பப்பட்டதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், அனுமதி பெறப்பட்ட தொடர்பாடல் முறைமையை எமிலி கரீமி துஷ்பிரயோகம் செய்தார் என எமிலி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆனால், இக் குற்றச்சாட்டை எமிலி கரீமி நிராகரித்துள்ளார். இவ் வழக்கை விசாரித்த நீதிவான் ஈவா வாம்புகு, எமிலி கரீமியை பிணையில் செல்ல அனுமதித்ததுடன் வழக்கு விசாரணையை மே மாதத்துக்கு ஒத்தி வைத்துள்ளார்
Average Rating