காதலரை கொலை செய்து உடலை உட்கொண்ட நபர்..!!
நரமாமிசம் உண்ணும் வழக்கமுடைய தனது ஒருபாலின காதலரை கொலை செய்து அவரின் மாமிசத்தை சமைத்து உட்கொண்டமை தொடர்பில் ஆர்மின் விபரித்துள்ளார்.
ஜேர்மனியைச் சேர்ந்த ஆர்மின் மெய்வ்ஸ் எனும் இந்நபர், 2001 ஆம் ஆண்டு பேர்ன்ட் பிராண்டஸ் என்பவரை கொலை செய்து அவரின் உடலை உட்கொண்டதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இவர்கள் இருவரும் இணையத்தளத்தின் மூலம் அறிமுகமான ஒருபாலின சேர்க்கையாளர்கள் ஆவர்.
தனது காதலர் பேர்ன்ட் பிராண்டஸின் சம்மதத்துடனேயே அவரை தான் கொலை செய்ததாக ஆர்மின் மெய்வ்ஸ் கூறினார்.
பிராண்டஸின் உடற்பகுதியொன்றை வெட்டி இருவரும் இணைந்து உண்பதற்கு இவர்கள் முயற்சித்தனராம்.
பின்னர் பிராண்டஸை கொலை செய்த ஆர்மின் மெய்வ்ஸ், அவரின் உடலை தான் சமைத்து கொண்டதாக புதிய ஆவணப்படமொன்றில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வழக்கில் ஆர்மினுக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
தற்போது 51 வயதான ஆர்மின் மெய்வ்ஸ் மேற்படி பயங்கர குற்றச்செயல் தொடர்பாக ஆவணப்படத்தில் தெரிவித்துள்ளார்.
பிராண்டஸின் உடற்பாகத்தை இருவரும் சமைத்து உண்ட பின்னர், பிராண்டஸ் குளித்துக்கொண்டிருந்ததாகவும் அவருக்காக, தான் ஸ்டார் ட்ரெக் நாவல் ஒன்றை வாசித்ததாகவும் ஆர்மின் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், பின்னர் பிராண்டஸை கத்தியால் குத்தி கொலை செய்து அவரின் உடலை தான் உட்கொண்டதாக ஆர்மின் மெய்வ்ஸ் தெரிவித்துள்ளார்.
Average Rating