சிறுத்தை நடமாட்ட அச்சம் : பெங்களூருவில் ஏராளமான பள்ளிகள் மூடல்..!!
Read Time:48 Second
பெங்களூருவை அடுத்த மரதாஹல்லி பகுதியில் பள்ளி ஒன்றில் சிறுத்தை புகுந்தது. பள்ளிகளில் மற்றும் அதனருகில் உள்ள பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருக்கும் சம்பவங்கள் பெங்களூரு சுற்றுவட்டார பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள சுமார் 134 பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. அப்பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Average Rating