மதுரையில் இன்று காலை கொத்தனார் குத்திக்கொலை: மகன் வெறிச்செயல்..!!
மதுரை செல்லூர் அருள் தாஸ்புரத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது42), கொத்தனார். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களது மகன் மணிகண்டன் (19). இவர் ஒரு சில்வர் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார்.
குடிப்பழக்கத்துக்கு அடிமையான செல்வகுமார் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்தார். இன்று அதிகாலையிலும் தகராறில் ஈடுபட்டபோது மகன் மணி கண்டன் தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது.
அப்போது செல்வக்குமார் வைத்திருந்த கத்தியை மணிகண்டன் பறித்து அக்கத்தியால் தந்தை செல்வகுமாரை சரமாரியாக குத்தினார். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து சிறிது நேரத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதை தொடர்ந்து நேராக மணிகண்டன் செல்லூர் போலீஸ் நிலையம் சென்று சரண் அடைந்து தந்தையை குத்தி கொன்றதாக கூறினார். அவரை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மகனே தந்தையை குத்தி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating