அமைச்சரின் தொடர்பு அதிகாரி கொலை
Read Time:47 Second
இலங்கையின் தலைநகர் கொழும்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தொடர்பு அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.சமூக சேவைகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் தொடர்பு அதிகாரியான சரவணமுத்து மகாகணபதிப்பிள்லை(55 வயது) என்பவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவராவார்.
கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் இடம்பெற்ற இந்த தாக்குதலுக்கு விடுதலைப்புலிகளின் பிஸ்டல் குழுவினரே பொறுப்பு என்று ஈபிடிபி கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.