கம்பஹாவில் திடீர் சுற்றிவளைப்பு தேடுதல்
Read Time:49 Second
கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலில் 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரு தினங்களில் மேற்கொண்ட தேடுதலின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி தனது ஆள் அடையாளங்களை உறுதி செய்து கொள்ள முடியாத பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்களும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 31 பேரும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 12 பேருமாக 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.