கோவையில் கள்ளக்காதலன் மூலம் கணவரை கொன்ற மனைவி- பரபரப்பு வாக்குமூலம்…!!
கோவை சிங்காநல்லூர் கள்ளிமடை காமராஜர் நகரை சேர்ந்தவர் புகழேந்தி (47). இவர் கடந்த 8–ந் தேதி கொலை செய்யப்பட்ட பிணமாக கிடந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அவரது மனைவி மகேஸ்வரி (25). அவரது கள்ளக்காதலன் நாகையை சேர்ந்த பிரசாந்த் (25) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
கைதான மகேஸ்வரி போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–
என்க்கும், பிரசாந்த்துக்கும் கடந்த 2½ ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதுப்பற்றி தெரியவந்ததும் எனது கணவர் என்னை கண்டித்தார். மேலும் பிரசாந்த்தையும் கண்டித்தார். எனது கணவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அடிக்கடி அவருக்கு பிரசாந்த் பணம் கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி பிரசாந்த் வர ஆரம்பித்தார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் தவறாக பேசினார்கள்.
இதையடுத்து பிரசாந்த்தை வீட்டிற்கு வரக்கூடாது என்று என கணவர் எச்சரித்தார்.
இது எங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பவத்தன்று பிரசாந்த், எனது கணவரை அழைத்துக்கொண்டு சென்று மதுவில் விஷம் கலந்து கொடுத்தார். அந்த மதுவை குடித்தும் அவர் இறக்கவில்லை. இதையடுத்து கத்தி வாங்கி வந்து அவரை வெட்டி கொலை செய்தார்.
பின்னர் நடந்த விபரங்களை என்னிடம் பிரசாந்த் தெரிவித்தார். நான் செல்போனை சுவீட்ச் ஆப் செய்ய சொன்னேன். ஆனால் எப்படியே போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர் என்று கூறியுள்ளார்.
கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Average Rating