வடிவேலுவுடன் நடனம் ஆடியது ஏன்?- ஸ்ரேயா

Read Time:1 Minute, 49 Second

24sreya.jpgதமிழ்- தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ரேயா. இவர் நடிகர் வடிவேலுடன் இந்திர லோகத்தில் நா. அழகப்பன் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இதுபற்றி அவர் அளித்த பேட்டி வருமாறு:-நான் நடிகர் வடிவேலுவுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியது பற்றி ஒரு சிலர் விமர்சிக்கிறார்கள். அவருடன் நடனம் ஆடினால் இமேஜ் போய்விடும் என்றும் சொல்கிறார்கள். நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு பாடலுக்கு நாட்டிய நடனம் ஆட வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அதற்கான வாய்ப்பு வடிவேலு படத்தில் கிடைத்தது. அதனால் உடனே ஒப்புக்கொண்டு விட்டேன். இது தவிர எனக்கு வடிவேலுவின் காமெடி நடிப்பு பிடிக்கும். அவர் நடித்த பல படங்களை பார்த்துள்ளேன், என்ற ஸ்ரேயாவிடம், சம்பளம் அதிகமாக கொடுத்ததால்தான் வடிவேலுவுடன் நீங்கள் ஒரு பாடலுக்கு நடனமாட சம்மதித்து இருப்பதாக சொல்கிறார்களே? என்று கேட்டதற்கு, அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு நடனமாட ஒப்புக்கொள்ளவில்லை. என் நடன திறமையை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைத்ததால்தான் இந்திரலோகத்தில் படத்தில் ஆட ஒப்புக்கொண்டேன். இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை: கணவன் கைது
Next post 8 வயதில் இருந்து நரக வேதனை: தாயின் 2-வது கணவர் செக்ஸ் தொல்லை; சட்டக்கல்லூரி மாணவி பரபரப்பு புகார்