கும்மிடிப்பூண்டி பெண் கொலையில் கணவரிடம் விசாரணை…!!

Read Time:2 Minute, 19 Second

0268fc88-ff72-4c51-8852-5b6955bbcaf4_S_secvpfகும்மிடிப்பூண்டி அருகே ஆந்திர மாநிலம் தடா பகுதியை அடுத்த பூடிக்குப்பத்தை சேர்ந்தவர் குத்தூஸ் அன்சாரி. இவரது மனைவி ஷேக் ஷர்மிளாபீ (வயது 32).

கடந்த 5–ந் தேதி முதல் மாயமாகி இருந்த ஷேக் ஷர்மிளாபீ, நேற்று முன்தினம் பல்லவாடா கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கழுத்தில் கயிறு இறுக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளியை பிடிக்க 9 தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது.

கொலையுண்ட ஷேக் ஷர்மிளாபீ வீட்டில் சொந்தமாக காட்டன் கையுறைகளை தயாரித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலையில் விற்பனை செய்து வந்தார்.

கடந்த 5–ந் தேதி விற்பனைக்கு சென்ற போது தான் கடத்தி கொலை செய்யப்பட்டு உள்ளார்.

இது தொடர்பாக முதல் கட்டமாக ஷேக் ஷர்மிளாபீயின் கணவர் குத்தூஸ் அன்சாரியிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனது மனைவி செல்போன் பயன்படுத்துவது கிடையாது என்று முன்னுக்குப்பின் முரணாக பேசினார். அவரது நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து குத்தூஸ் அன்சாரியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் பரபரப்பு தகவல் கிடைத்து உள்ளதாக கூறப்படுகிறது.

ஷேக் ஷர்மிளாபீவுக்கு வேறு யாருடனும் பழக்கம் இருந்ததா? முன்விரோதத்தில் யாரேனும் தீர்த்து கட்டினார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோவையில் கள்ளக்காதலன் மூலம் கணவரை கொன்ற மனைவி- பரபரப்பு வாக்குமூலம்…!!
Next post செந்துறையில் ஓடும் ரெயில் ஏறிய மாணவர் தவறி விழுந்து 2 கால்கள் துண்டானது: ரெயில் மீது சரமாரி கல்வீச்சு…!!