பெரியபாளையம் அருகே திருப்பதிக்கு நடந்து சென்ற பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்து விபத்து: ஒருவர் பலி…!!

Read Time:1 Minute, 33 Second

22b60b70-057b-4ef2-945d-96b1f3d93c71_S_secvpfசென்னை, ராஜாபாதர் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 55). இவர் அதே பகுதியை சேர்ந்த சிலருடன் திருப்பதி கோவிலுக்கு நடை பயணமாக சென்றார்.

அவர்கள் பெரிய பாளையத்தை அடுத்த கன்னிகைபேர் அருகே பெரிய பாளையம்–சென்னை நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது சென்னையில் இருந்து பெரியபாளையம் நோக்கி வந்த கார் திடீர் என்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலை ஓரம் நடந்து சென்ற பக்தர்கள் கூட்டத்துக்குள் கண் இமைக்கும் நேரத்தில் புகுந்தது. இதில் ஜனார்த்தனன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து நடந்ததும் கார் டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

தகவல் அறிந்ததும் பெரியபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ஜனார்த்தனன் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோவை செட்டிப்பாளையத்தில் பாய்லர் வெடித்து 6 பேர் உடல்கருகினர்..!!
Next post பாவூர்சத்திரம் அருகே கள்ளக்காதலி வீட்டில் ஆசிரியர் கொன்று புதைப்பு: உடலை தோண்டி எடுத்து விசாரணை…!!