தெளிவான சாட்சிகள் இருந்தும் குற்றவாளி தண்டிக்கப்படவில்லை..!!
Read Time:1 Minute, 21 Second
எம்பிலிப்பிட்டியில் இடம்பெற்ற மோதலின் போது பலியான இளைஞர் தொடர்பில், தெளிவான சாட்சிகள் இருக்கின்ற போதும், காவல்துறை அதிகாரி கைது செய்யப்படாமை பிரச்சினைக்குரிய விடயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் செயலாளர் அஜித் பத்திரன இவ்வாறு குறிப்பிட்டார்.
எம்பிலிப்பிட்டிய மஹாஎல பிரதேசத்தின் வீடொன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது, காவல்துறையினருடன் இடம்பெற்ற மோதலில், சுமித் பிரசன்ன என்ற இளைஞர் கடந்த 7ஆம் திகதி உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் எம்பிலிப்பிட்டிய உதவி காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Average Rating