இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு…!!
Read Time:1 Minute, 1 Second
பசிபிக் கடல் பிராந்தியத்தில் பூகம்ப பாதிப்பு பகுதியில் உள்ள இந்தோனேசியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
சும்பா பிராந்தியத்தில் கிழக்கு நுசா தெங்கரா பகுதியில் பூமிக்கடியில் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியிருந்த போதிலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதியடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நிலநடுக்கம் குறித்த தகவல் வெளியானதும், சம்பவ இடத்திற்கு பேரிடர் மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர்.
Average Rating