காருக்குள் அடைக்கப்பட்ட பிணைக்கைதிகளை குண்டு வைத்து கொன்ற 4 வயது சிறுவன்..!!
ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களிடம் சிக்கும் பிணைக் கைதிகளை ஈவுஇரக்கமின்றி தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்து வருகின்றனர். அதை வீடியோ ஆக வெளியிடுகின்றனர்.
அந்த வகையில் தற்போது 3 பிணைக் கைதிகள் வெடிகுண்டு நிரம்பிய காருக்குள் அடைத்து வைத்து சிறுவன் மூலம் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதுபற்றிய வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ‘‘4 வயது சிறுவன் ஐ.எஸ். தீவிரவாதிகள் சீருடை அணிந்து இருக்கிறான். அவன் கையில் ரிமோட் வைத்து இருக்கிறான். அந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்ட ஒரு காரில் ஆரஞ்சு நிற உடை அணிந்த பிணைக் கைதிகள் 3 பேர் கட்டப்பட்டுள்ளனர்.
சிறிது நேரத்தில் சிறுவன் தான் வைத்திருக்கும் ரிமோட்டை அழுத்தி அந்த வெடிகுண்டை வெடிக்க செய்கிறான். அதை தொடர்ந்து அந்த கார் தூள், தூளாக வெடித்து சிதறுகிறது. அதனுடன் சேர்ந்து பிணைக் கைதிகளும் உடல் துண்டாகி மடிகின்றனர்.
இவர்கள் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் புகுந்து உளவு பார்த்தவர்கள் ஆவர். இவர்களை கொடூரமான முறையில் கொன்ற 4 வயது சிறுவன் பெயர் ஏசா டேர். தனது தாத்தாவுடன் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இருக்கிறான்.
இங்கிலாந்தை சேர்ந்த இவனது தாயார் கிரேஸ் டேர் சிரியாவுக்கு வந்து மதம் மாறி ஐ.எஸ். தீவிரவாதியை திருமணம் செய்து கொண்டவர் ஆவார்.
சமீபத்தில் வெளியான இந்த கொலை வீடியோவில் சிறுவன் அருகே முகமூடி அணிந்த தீவிரவாதி நின்றபடி இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுக்கு எச்சரிக்கை விடுக்கிறான். அதில், ‘‘எங்கள் இயக்கத்துக்குள் உங்கள் உளவாளிகளை அனுப்பினால் அவர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும்.
எங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் இங்கிலாந்து ராணுவத்தை திரும்ப பெறுங்கள். இல்லாவிடில் பல்லாயிரம் மைல் தொலைவில் இருக்கும் உங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்துவோம்’’ என எச்சரிக்கை விடுத்தான்.
Average Rating