நாடுகடத்தப்படவுள்ள குழந்தையை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற மறுக்கும் டாக்டர்கள்..!!
ஆஸ்திரேலியாவில் நாடு கடத்தப்படுவதற்கான ஆபத்தை எதிர்நோக்கும் ஒரு பெண் குழந்தையை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற அனுமதிக்க மறுக்கும் மருத்துவர்களுக்கு ஆதரவாக அந்த மருத்துவமனையில் நூற்றுக்கணக்கானோர் கூடியுள்ளனர்.
நாடுகடத்தப்படவுள்ள குழந்தையை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற மறுக்கும் டாக்டர்கள்I
நாடுகடத்தப்படவுள்ள குழந்தையை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற மறுக்கும் டாக்டர்கள்
அந்தக் குழந்தைக்கு ஏதுவான ஒரு வீடு கிடைக்கும் வரை அதனை மருத்துவமனையில் இருந்து விடுவிக்கமாட்டோம் என்று அந்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
ஆஸ்திரேலியாவுக்கு வெளியே பசுபிக் தீவான நவுருவில் அமைக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாகி அந்தக் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்கு வெளியே குடியேறிகளுக்கான தடுப்பு முகாம்களை அமைக்கும் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கை கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. ஆனால், மோசமான நிலையில் உள்ள படகுகளில் குடியேறிகள் ஆஸ்திரேலியவுக்கு வருவதை தடுக்க இது தேவை என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் கூறுகின்றது.
Average Rating