சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மாணவி சரண்யாவின் உடல் மறுபிரேத பரிசோதனை..!!
Read Time:1 Minute, 15 Second
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில், மருத்துவ மாணவி சரண்யாவின் உடல் இன்று மறுபிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையின் தடயவியல் துறை இயக்குநர் தலைமையிலான குழு சரண்யாவின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்கின்றனர்.
மறு பிரதே பரிசோதனையை மாணவியின் பெற்றோர் தரப்பில் ராமச்சந்திரா மருத்துவமனையின் தடயவியல் துறை இயக்குநர் சம்பத்குமார் மேற்பார்வை செய்கிறார்.
சென்னை உயர்நீதிமன்ற அனுமதியின்படி, சரண்யாவின் உடல் இன்று காலை புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது.
கள்ளக்குறிச்சி அருகே பங்காரத்தில் ஜனவரி 23ம் தேதி கிணற்றில் இருந்து சரண்யா உட்பட 3 மருத்துவ மாணவிகளின் உடல்கள் மீட்கப்பட்டன.
Average Rating