பெங்களூருவில் காணாமல் போன குழந்தை, குப்பைத் தொட்டியில் பிணமாக மீட்பு..!!
Read Time:1 Minute, 14 Second
பெங்களூருவில் வியாழக்கிழமை மாலை காணாமல் போன 3 வயது சிறுமி, வெள்ளிக்கிழமையன்று குப்பைத் தொட்டியில் இருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
விஜய் – சீமா தம்பதிகளின் ஒரே மகளான த்ரிஷா (3), பக்கத்து வீட்டில் விளையாடச் சென்ற போது மாயாமானாள். அக்கம் பக்கத்தில் எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, காவல்துறையினர் நடத்திய தீவிர சோதனையில், குழந்தையின் வீட்டுக்கு அருகே உள்ள குப்பைத் தொட்டியில் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
உடனடியாக குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே குழந்தையின் மரணம் குறித்த தெரிய வரும் என்று கூறப்படுகிறது
Average Rating