அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் விசேட கலந்துரையாடல்..!!

Read Time:1 Minute, 45 Second

f339fba45aee901e4986bca3ccec776aதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் நாளை வெள்ளிக்கிழமை முக்கிய பேச்சு நடைபெறவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்களை பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்குமாறு கோரி தமிழ் அரசியல் கைதிகள் அண்மையில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் இம்மாதம் 20ஆம் திகதிக்கு முன்னதாக விடுவிக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் வழங்கிய உறுதியைத் தொடர்ந்து போராட்டத்தை அவர்கள் கைவிட்டிருந்தனர்.

இதனையடுத்து சிலர் பிணை அடிப்படையில் விடுவிக்கப்பட்டிருந்த போதிலும் எஞ்சியவர்கள் தொடர்பிலான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் மற்றைய அரசியல் கைதிகளின் நிலை தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கில் நாளை இந்த பேச்சு நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் சிறைச்சாலைகள், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன், சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, சட்டமா அதிபர் திணைக்கள உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேம்ஸ் நதி நிரம்பியது – லண்டனில் வெள்ள அபாயம்..!!
Next post வால் நட்சத்திரத்தில் தரை இறங்கிய பீலே விண்கலம் பணி ஓய்வு..!!