மைத்துனரின் ஆணுறுப்பை வெட்டிய பெண்..!!
Read Time:1 Minute, 27 Second
இந்தியாவில் மத்திய பிரதேஸில் சித்தி மாவட்டத்தில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்ட மைத்துனரின் ஆணுறுப்பை வெட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண்ணின் கணவன் தூரப் பிரதேசத்தில் தொழில் புரிந்தமையால் அவர் வீட்டுக்கு வருவது குறைவு இதனை வாய்ப்பாக பயன்படுத்திய குறித்த நபர் அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று வந்துள்ளார்.
நீண்டகாலமாக தொடர்ந்த இந்த பாலியல் துன்புறுத்தலுக்கு அப்பெண் ஒருநாள் ஆத்திரம் தாங்காமல் அவருக்கு இணக்கம் தெரிவிப்பது போல் நடித்து அவரின் ஆண் உறுப்பை கத்தியால் வெட்டியுள்ளார்.
மேலும் வெட்டிய ஆண் உறுப்பை ஆதாரமாக பொலிஸிடம் எடுத்துச் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில் இச்சம்பவத்துக்கு முகங்கொடுத்த அந்த நபர் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து குறித்த பெண் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Average Rating