பாலியல் துஸ்பிரயோகம் செய்த தொழிலாளி கைது..!!

Read Time:2 Minute, 25 Second

uiதிருவனந்தபுரம் அருகே உள்ள மாறநல்லூர் என்ற இடத்தை சேர்ந்தவர் சசி. (வயது 65). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.

கூலி தொழிலாளியான சசிக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் அவர் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிந்து வந்துள்ளார். சம்பவத்தன்று சசி வேலைக்கு செல்லாமல் வீட்டில் குடி போதையில் படுத்திருந்தார்.

அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு 8ம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் உள்ளார். பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டதால் வீட்டில் அந்த மாணவி மட்டும் தனியாக டி.வி. பார்த்துக்கொண்டிருந்தார்.

இதை நோட்டமிட்ட சசிக்கு விபரீத எண்ணம் ஏற்பட்டது. இதனால் அவர் அந்த மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். குடி போதையில் சசி வருவதை பார்த்து அந்த மாணவி பயந்துபோய் கூச்சல் போட்டார்.

இதனால் அவரை சசி தாக்கி வாயை பொத்தி கற்பழித்தார். பிறகு நடந்ததை வெளியில் கூறினால் கொன்று விடுவதாக மிரட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டார். மாலையில் வீடு திரும்பிய அந்த மாணவியின் பெற்றோர் மகளுக்கு நடந்த கொடுமையை அறிந்து ஆத்திரம் அடைந்தனர்.

சசியை அவர்கள் தேடிய போது அவர் தலைமறைவாகி இருந்தது தெரியவந்தது. இதனால் 8ம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடுமை பற்றி மாறநல்லூர் பொலிசாரிடம் புகார் செய்யப்பட்டது. பொலிசார் வழக்கு பதிவு செய்து சசியை தேடி வந்தனர்.

அப்போது அவர் காட்டாக்கடை பகுதியில் சுற்றித்திரிந்தது தெரிய வந்தது. உடனே அங்கு சென்ற பொலிசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிம்பு நயன்தாரா திருமணத்தால் பெரும் பரபரப்பு..!!
Next post அடுத்தது நீதான்: நாமலுக்கு ராஜபக்ஷ எச்சரிக்கை..!!