குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு கணவன்–மனைவி தற்கொலை..!!

Read Time:2 Minute, 42 Second

1415கோவை பெரியநாயக்கன் பாளையம் கணேசபுரம் 3–வது தெருவை சேர்ந்தவர் ஆல்பர்ட்(வயது 36). டாக்சி டிரைவர்.

இவரது மனைவி விக்டோரியா (34). இவர்களுக்கு சைஜி(12), லைஜி(2) என்ற மகன்கள் உள்ளனர். விக்டோரியா அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டெய்லர் வேலைக்கு சென்று வந்தார்.

ஆல்பர்ட்டுக்கு குடிப்பழக்கம் உண்டு. இவர் ஒழுங்காக வேலைக்கு செல்வது கிடையாது. வீட்டு செலவுக்கும் பணம் கொடுப்பது கிடையாது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் இரவும் குடிபோதையில் வீட்டுக்கு வந்த ஆல்பர்ட் மனைவியிடம் தகராறு செய்தார். பின்னர் தனது 2 மகன்களையும் அழைத்துக் கொண்டு பாலமடை ஸ்ரீரங்கா நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அங்கு 2 மகன்களையும் பெற்றோரிடம் விட்டு விட்டு வீட்டுக்கு வந்தார்.

இந்தநிலையில் ஆல்பர்ட்டின் சகோதரர் அலெக்சாண்டர் நேற்று காலை ஆல்பர்ட் வீட்டுக்கு சென்றார். அப்போது வீடு பூட்டப்பட்டு இருந்ததை கண்டு சந்தேகமடைந்த அவர் கதவை உடைத்து உள்ளே சென்றார். வீட்டுக்குள் ஆல்பர்ட்டும், அவரது மனைவி விக்டோரியாவும் சாணிப்பவுடர் குடித்து தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தனர்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு சப்–இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரது உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து அலெக்சாண்டர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரு நாள் சர்வதேசப்போட்டி தொடரில் தென் ஆப்ரிக்கா கைப்பற்றியது..!!
Next post இந்தியா அனுப்பிய சிங்கப்பூர் செயற்கைக்கோள் நன்றாக இயங்கி வருவதாக தகவல்..!!