நாமக்கல் ஆசிரியர் பயிற்சி மாணவியை கழுத்து அறுத்து கொன்ற மாணவன்: கோர்ட்டில் சரண்…!!
நாமக்கல் ஆசிரியர் பயிற்சி மாணவியை கழுத்து அறுத்து கொலை செய்த மாணவன் இன்று திண்டுக்கல் கோர்ட்டில் சரணடைந்தார்.
நாமக்கல் அருகில் உள்ள போதுபட்டி காலனியைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி சந்திரசேகரன் (வயது 46). இவரது மகள் அபிராமி (18). இவர் தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் 2–ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர்களது உறவினரான பழனி அருகில் உள்ள ஆயக்குடியைச் சேர்ந்த தமிழ்குமரன் (16) என்பவர் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றார். இவர் ஆயக்குடி அரசு பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறார். அபிராமியை தமிழ்குமரன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
அபிராமிக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்து வந்தனர். இதை அறிந்ததும் தமிழ்குமரன் அபிராமியிடம் நீ என்னைதான் திருமணம் செய்ய வேண்டும் என வற்புறுத்தினார்.
இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தமிழ்குமரன் கத்தியால் அபிராமியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
போலீசார் மாணவனை தேடி வந்த நிலையில் இன்று திண்டுக்கல் கோர்ட்டில் சரணடைந்தார்.
Average Rating