ஜனாதிபதி, ஜேர்மன் அதிபரை சந்திக்கவுள்ளார்..!!
Read Time:1 Minute, 8 Second
ஜேர்மனுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று ஜேர்மன் அதிபர் எஞ்சலா மேர்கலை சந்திக்கவுள்ளார்.
இதன்போது இரு தரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளன.
அத்துடன், அந்த நாட்டு சபாநாயகர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் பொருளாதார அமைச்சர் ஆகியோரையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
ஜனாதிபதி ஊடக பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அத்துடன், இன்று மாலை பல பொது நிகழ்வுகளிலும் கலந்துக்கொள்ளவுள்ளார்.
இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை விருத்தி செய்வதே, ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating