காதல் மனைவி கடத்தல்: கமிஷனரிடம் வாலிபர் மனு…!!
Read Time:1 Minute, 15 Second
சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:–
கடந்த 8 ஆண்டுகளாக நானும், நந்தினி என்ற பெண்ணும் காதலித்து வந்தோம். எங்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த 12–ந்தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டோம். திருமணத்தை ராயபுரம் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளோம்.
இந்த நிலையில் மனைவி நந்தினியை அவரது வீட்டார் அடித்து உதைத்து கடத்தி சென்று விட்டனர். அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை.
தன்னை மீட்டு செல்லுமாறு செல்போனில் மட்டும் தகவலை அனுப்பி கொண்டு இருக்கிறார். அவரை மீட்டு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
Average Rating